யோஷித ராஜபக்ஸ மீண்டும் கடற்படையில்
2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 திகதியில் இருந்து யோஷித ராஜபக்ஸவை மீண்டும் லெப்டினன் பதவியில் மீண்டும் அமர்த்துமாறு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய கடற்படை தளபதி அதற்கான ஆவணங்களில் கைச்சாத்திட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் யோஷித ராஜபக்ஸ கடற்படை இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.
நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் பாதுகாப்பு அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரான இவர், பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, கடற்படைத் தலைமையகத்தின் அனுமதி இன்றி யோசித்தவால் கடற்படை முகாமுக்குள் பிரவேசிக்க முடியாது எனவும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.