மத்ரஸாவில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி
28 ஹாபிழ்கள் பலி
லைபீரியாவில் பரிதாபம்
லைபீரியா நாட்டில் உள்ள மத்ரஸாவில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 28 ஹாபிழ்கள் உட்பட 30 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவின் தலைநகர் மொன்ரோவியா. இங்குள்ள மத்ரஸாவில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் உறங்கி கொண்டிருந்த 10 முதல் 20 வயதிற்குட்பட்ட 28 ஹாபிழ்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உட்பட 30 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
இரவு நேரம்,
மாணவர்கள் உறங்கி கொண்டிருந்த வேளை, திடீரென தீ பரவியதால் சிறார்கள் தப்பியோட வழியின்றி தீயில் அகப்பட்டு மரணமாகியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மத்ரஸாவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மாணவர்கள் பலியானதை அறிந்த அந்நாட்டு ஜனாதிபதி ஜார்ஜ் வே தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.