மாளிகைக்காட்டுத்துறையிலிருந்து
கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவரும்
காணாமல் போய் 10 நாட்கள்
சாய்ந்தமருது, காரைதீவில் ஏக்கத்துடன் உறவினர்கள்
ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மூவர் கடந்த பத்து நாட்களாக வீடு திரும்பாத காரணத்தினால் அவர்களது குடும்பத்தினர் கலக்கத்துடனும் கவலையுடனும் உள்ளனர்.
கடந்த 18ஆம் திகதி காரைதீவு மாளிகைக்காட்டுத்துறையிலிருந்து ஆழ்கடலுக்கு இயந்திரப்படகில் மீன்பிடிக்கச் சென்ற சாய்ந்தமருதைச் சேர்ந்த சீனிமுகம்மது ஜுனைதீன் (வயது36), இஸ்மாலெவ்வை ஹரீஸ் (வயது37) மற்றும் காரைதீவைச் சேர்ந்த சண்முகம் சிறிகிருஷ்ணன்(வயது47) ஆகிய மூவரே இவ்விதம் காணாமல் போயுள்ளனர்.அவர்கள் பத்து நாட்களாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்று கூடத் தெரியவில்லை. இந்நிலையில் இவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியாகி, கவலையுடன் உள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.