சம்பள உயர்வைக் கோரி
21ஆவது நாளாக தென்கிழக்கு பல்கலைக்கழக
கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொடர் பணிபகிஷ்கரிப்பு போராட்டம் 21ஆவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் ஆரம்பமாகியிருந்தது.

2500 ரூபாய் சம்பள உயர்வு ஏனைய அரசாங்க ஊழியருக்கு வழங்கப்பட்ட போதும் கல்விசாரா ஊழியர்களுக்கு மறுக்கப்படுவதேன் போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.

இதன்போது, தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தலைவர் முஹம்மத் நௌபர் கருத்து தெரிவிக்கையில்,

தேர்தல் அறிக்கையில் குறிப்பிடும் அரசியல்வாதிகள் வரவு செலவு திட்டத்தில் தெரிவித்த ஊதிய உயர்வை பெற்றுத்தர தயங்குகின்றனர். ஏனைய அரச ஊழியர்களுக்கு வழங்கிய சம்பள உயர்வை அரசாங்கம் எமக்கு பெற்றுத்தர தர மறுப்பதேன் என்ற கேள்வியை எழுப்பினார்.

நாடாவிய ரீதியில் இடம்பெற்று வரும் பல்கலைக்கழக 27 பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எமது தென்கிழக்கு பல்கலைகழகமும் இணைந்து இன்று 21ஆவது தினத்தைக் கடந்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுட்டு வருகின்றோம் .

எமது கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செவிசாய்த்து தீர்த்து தரும் வரை எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.

எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வேட்பாளர்கள் தொடர்பிலே கவனம் செலுத்துகின்றனர்.

நாட்டில் பல பாகங்களிலும் அரச ஊழியர்களது சம்பள உயர்வு சம்பந்தப்பட்ட போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களது பணிபகிஷ்கரிப்பு போராட்டம் சம்பந்தமாக உயர்கல்வி அமைச்சருக்கு தெரியப்படுத்திய போதும் அது தொடர்பில் எதுவித முடிவு எட்டப்படாத நிலை ஏமாற்றத்தை தருவதாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்






0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top