சஹ்ரான்
பயன்படுத்திய ஆயுதங்கள்
பாலமுனை
பகுதியில் மீட்பு?
அரசாங்க புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த
தகவலின் அடிப்படையில் அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பகுதியில் ரி56 ரக துப்பாக்கி மற்றும் பல்வேறு வெடிபொருட்கள்
கைப்பற்றப்பட்டுள்ளன.
அக்கறைபற்று, பாலமுனை பகுதியின் ஒலுவில் துறைமுகத்திற்கு செல்லும்
வீதியில் உள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வெடிபொருட்கள்
இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது ரி56 ரக துப்பாக்கி ஒன்று, அதற்கான தோட்டக்கள் 30 மற்றும் அதற்கான மெகசின் ஒன்றும்
கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் 7 டெட்டனேட்டர்கள், 4 ஜெலட்னைட்கள், வயர், அமோனியா, யூரியா உட்பட பல்வேறு பொருட்கள்
கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுவரையில் இனங்காணப்படாத இரு வகை வெடிபொருட்கள்
இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஆயுதங்கள் ஆட்டுத் தொழுவம் ஒன்றின் கீழ்
புதைக்கப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஆயுதங்கள் சஹ்ரான் குழுவினரால் மறைத்து
வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.