ஓட்டமாவடி தியாவட்டவான்
ஆற்றில் விழுந்து ஒருவர் பலி
ஓட்டமாவடி தியாவட்டவான் ஆற்றில் இன்று (26) மதியம் ஒருவர் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒட்டமாவடி – தியாவட்டுவான், அலியார் வீதியை சேர்ந்த முஹைதீன் பாவா இஸ்ஸதீன் (54 வயது) 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொள்வதற்காக பாலத்தில் இருந்து குதித்தாரா அல்லது தவறுதலாக விழுந்தாரா என்ற சந்தேகத்தின் பேரில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவரின் சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.