நீதிமன்ற உத்தரவையும் மீறி
பௌத்த மதகுருவின் உடல்
தகனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து
முல்லைத்தீவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த மதகுருவின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வீதியை மறித்து பெருந்திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மதகுருமார்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு பழைய வைத்தியசாலை முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய மக்கள், அங்கிருந்து பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றிருந்தனர்.
தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரத்தில், முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, அரசாங்கம் மற்றும் ஐ.நா. சபைக்கான மகஜர்கள் மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.