கோத்தபாயவுக்காக போலியான
தகவல்களை பரப்பும்
நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்
மட்டக்களப்பு மாவட்ட தேசிய
இளைஞர் முன்னணியின்
ஒருங்கிணைப்பாளர் அறிக்கை
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவை ஆதரிப்பதற்காக மறைமுகை அரசியல் யுத்திகளை நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மேற்கொண்டு வருவதாக, ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சசிதரன் விரேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ஸவை நேரடியாக ஆதரித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதால், மக்களை திசை திருப்பும் நோக்கில் சஜித் பிரேமதாஸ தொடர்பான போலியான தகவல்கள வியாழேந்திரன் வெளியிட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.