சட்டத்தரணி தாக்கப் பட்டதை கண்டித்து
கல்முனையில் சட்டத்தரணிகள்
சுலோகங்கள் ஏந்தி ஆர்ப்பாட்டம்.
நீராவியவி
பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்றத்தை அவமதித்து
சட்டத்தரணியை தாக்கிய விவகாரத்தை கண்டித்து இன்று கல்முனை சட்டத்தரணிகள் பணி பகிஷ்கர்ப்பில்
ஈடுபட்டனர்.
சட்டத்தரணிகள்
பௌத்த பிக்குகளினால்
நேற்று முல்லைத்தீவில்
தாக்கப்பட்டதை கண்டித்தும் நீதிமன்ற தீர்ப்பை மதியாமல்
பிக்குகள் நடந்துகொண்டதையும்
கண்டித்து இன்று
கல்முனை நீதிமன்ற
கட்டிட தொகுதி
முன்னிலையில் இந்த கண்டன எதிர்ப்பு
நடவடிக்கை இடம்பெற்றது.
கல்முனை
சட்டத்தரணிகள் சங்க தலைவர் சட்டத்தரணி ஸாரிக்
காரியப்பர் தலைமையில் ஒழுங்கு செய்திருந்த இந்த
நீதிமன்ற நடவடிக்கையை
பகிஷ்கரிக்கும் நடவடிக்கையில் சுலோகங்களை ஏந்தி தமது
ஆதரவை சட்டத்தரணிகள்
தெரிவித்திருந்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.