க்காவில் 107 பேரை பலிவாங்கிய
கிரேன் விபத்து நிகழ்ந்தது எப்படி?

புனித நகரமான சவூதி அரேபியாவின் க்காவில் உள்ள பெரிய மசூதி மீது ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் 107 பேர் பலியாகினர். இந்த கிரேன் விபத்துக்கு இயற்கை சீற்றமே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
க்காவில் புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட முஸ்லிம்கள் அங்குள்ள பெரிய மசூதியில் குழுமியிருந்தனர். அப்போது அருகில் கட்டுமானப் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த ராட்சத கிரேன் 2 துண்டாக முறிந்து மசூதி மீது விழுந்ததில் உள்ளே இருந்த 87 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த கிரேன் விபத்துக்கு பலத்த காற்று வீசியதே காரணம் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

வூதி அரேபியாவின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வேகத்துடன் காற்று வீசி வருகிறது. இந்த காற்றில் நிலை தடுமாறிய கிரேன், மசூதியின் மேற்கூரை மீது மோதி இரண்டு துண்டாக உடைந்தது. மேற்கூரை உடைந்து உள்ளே இருந்த ஹஜ் பயணிகள் மீது விழுந்ததில் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக வூதி அரேபிய சிவில் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி காண்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top