முதலாவது அமைச்சரவை
நாளை மறுதினம் கூடுகின்றது?
தேசிய
அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை
மறுதினம் கூடவுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. இக்கூட்டமானது, ஜனாதிபதி
செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்
நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய
அரசாங்கத்தில் 48 அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களை நியமிப்பதற்கு,
நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் ஏற்கனவே
43 அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
நாளைய தினம்
ஐந்து அமைச்சர்கள்
ஜனாதிபதி முன்னிலையில்
சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
இதனையடுத்து,
நாளை மறுதினம்
முதலாவது அமைச்சரவை
கூட்டத்தை கூட்ட
எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தில்
புதிதாக 12 அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.