குடும்ப நினைவுச்சின்னத்திற்கு செலவிட்ட பணத்தை
மீளச் செலுத்துமாறு
மஹிந்தவிற்கு பணிப்பு?
அரசாங்க
பணத்தை பயன்படுத்தி
மெதமுல்லையில் டீ.ஏ.ராஜபக்ஸ அறக்கட்டளையினால்
நிர்மாணித்த குடும்ப நினைவுச்சின்னத்திற்காக
செலவிட்ட பணத்தை
மீண்டும் அரசாங்கத்திற்கு
செலுத்துமாறு அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாகட் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்
நினைவுச்சின்னம் மற்றும் அருங்காட்சியகம் முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸவின் பெற்றோரின்
கல்லறையுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.அதற்காக
காணி மீட்டல்
கூட்டுத்தாபனத்தின் எட்டரை கோடி
பணம் செலவிடப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க
பணத்தை தனியார்
நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தவறு என்பதனால் அப்பணத்தை
மீண்டும் செலுத்துமாறு
இதனூடாக டீ.ஏ.ராஜபக்ஸ அறக்கட்டளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக த்யற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த
கல்லறை நினைவுச்சின்னம்
குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.