பொலிஸ்காரர் முதுகில் சவாரி செய்யும்
இந்திய மாநில எம்.எல்.ஏ
இந்தியாவிலுள்ள காஷ்மீரில் பா.ஜ எம்.எல்.ஏ ஒருவர் பாதுகாப்புக்கு வந்த பொலிஸ்காரர் முதுகில் சவாரி செய்த செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் உள்ள ஜம்மு பா.ஜ எம்.எல்.ஏவாக இருப்பவர் கிருஷ்ண லால். இவர் அப்பகுதியில் உள்ள சிறிய ஓடை ஒன்றை கடப்பதற்கு தனது பாதுகாவலர் முதுகில் சவாரி செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் அதிகமாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவருடன் வந்த மற்ற அனைவரும் மிக எளிதாக அந்த ஓடையை கடந்து செல்லும் காட்சி அநத் புகைப்படத்தில் காணப்படுகின்ற போது, இவர் மட்டும் பொலிஸ்காரர் முதுகில் சவாரி செய்துள்ளார் என்று எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
இதுகுறித்து பாதுகாவலர் முதுகில் சவாரி செய்த கிருஷ்ணலால் விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், எனக்கென தனியாக பாதுகாப்புக்காக பொலிஸ்காரர் ஒருவரை அரசு நியமித்துள்ளது. ஓடையை கடக்க அவர் தனிப்பட்ட முறையில் எனக்கு உதவ முன்வந்தார். இதையடுத்து அவர் முதுகில் சவாரி செய்து நான் ஓடையை கடந்தேன் இதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை என்று சப்பை கட்டு கட்டியுள்ளார். மேலும் பாகிஸ்தானின் அத்துமீறில் துப்பாக்கி சூட்டில் பலியான இளைஞர் ஒருவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக, எனது கடமையை செய்வதற்காகத்தான் சென்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த விவகாரம் இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.