பிரதமர் ரணில் விக்ரமசிங்க
இன்று புது டில்லி செல்கிறார்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் பயணமாக இன்று புது டில்லி செல்கிறார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப் பயணத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாட்டு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசுவார். இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் இவர் சந்திக்கிறார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு செல்கிறார்.
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் 13 வது சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்கெனவே உறுதி அளித்துள்ளார்.
பிரதமரின் டில்லி விஜயத்தின்போது 13 வது சட்டத் திருத்தம் குறித்தும், இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமரின் விஜயத்தின்போது
பிரதமரின் பாரியார் மைத்ரி வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர, பிரதமரின்
செயலாளர் சமன் எக்கநாயக்க ஆகியோரும் உடன் செல்வார்கள்
கடந்த ஜனவரியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.