முஸ்லிம்களின் (துஆ) பிரார்த்தனைக்கு கையேந்தி ஆமீன் கேட்ட
தேர்தல்கள் ஆணையாளர்
மஹிந்த தேசப்பிரிய
சம்மாந்துறையிலுள்ள பள்ளிவாயல் ஒன்றில் இடம்பெற்ற (துஆ) பிரார்த்தனையின் போது தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் முஸ்லிம்களின் (துஆ) பிரார்த்தனைக்கு
கையேந்தி ஆமீன் (ஏற்றுக்கொள்வாயாக) சொல்லியமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தேர்தல் திணைக்களத்தின் 60 ஆவது நிறைவும், இஸ்லாமிய சமய நிகழ்வும் கடந்த 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சம்மாந்துறை ஹிஜ்ரா ஜூம்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திலினி விக்கரமரத்தன தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
இந்நிகழ்வில் பள்ளிவாயலில் இடம்பெற்ற துஆப்பிரார்த்தனையின் போது மஹிந்த தேசப்பிரியவும் (துஆ) பிரார்த்தனைக்கு கையேந்தி ஆமீன் கூறி ஒற்றுமையை
வெளிப்படுத்தினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.