பிரதமர் ரணில் விக்ரமசிங்க
தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜெக்கோப்
சூமா சந்திப்பு
பிரதமர்
ரணில் விக்ரமசிங்க,
தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி ஜெக்கோப்
சூமாவை சந்தித்து
பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சீனாவுக்கான
விஜயத்தை மேற்கொண்டிருந்த
சூமா நாடு
திரும்பும் போது அவரது விமானம் பண்டாரநாயக்க
சர்வதேச விமான
நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இதன்போது
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கையின்
இனப்பிரிச்சினை தீர்வு தொடர்பில், தென்னாப்பிரிக்கா அரசாங்கம் கடந்த வருடம் முக்கிய
முனைப்புகளை மேற்கொண்டிருந்தது.குறிப்பாக
அந்த நாட்டின்
இனப்பிரச்சினை தீர்வுக்கு பயன்படுத்தப்பட்ட
உண்மைகளை கண்டறிந்து
நல்லிணக்கம் செய்யும் ஆணைக்குழுவை பரிந்துரை செய்திருந்தது.இதற்காக சிறில்
ரமபோஷாவை விசேட
தூதுவராக, தென்னாப்பிரிக்க
ஜனாதிபதி நியமித்ததுடன்,
சிறில் ரமபோசா
இலங்கைக்கு விஜயம் செய்து, அரசாங்கத் தரப்பையும்
தமிழ்த் தேசிய
கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்து
பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.