சபாஷ் சரியான
போட்டி
ஒலுவிலில் ஏற்பட்டு வரும் கடலிரிப்பு சம்பந்தமாக பார்வையிடுதற்காக
முஸ்லிம் அமைச்சர்கள் நான் முந்தி நீ முந்தி
ஒரே நாளில் விஜயம்!
ஒலுவில் கடற்பரப்பில் மிக நீண்ட நாட்களாக ஏற்பட்டு வரும் கடலிரிப்பு மற்றும் மீனவர் பிரச்சினை சம்பந்தமாக நேரில்
கண்டறி வதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் ஆகியோர் நான் முந்தி நீ முந்தி என ஒலுவில் கடற்கரைக்கு சென்று பார்வையிட்டதுடன் மீனவர்களுடன் மீனவர் பிரச்சினை சம்பந்தமாகவும் கலந்துரையாடியுள்ளனர்.
இவர்களின் இந்த விஜயம் உண்மையாகவே மக்களின் சேவை நலன் கருதியா? அல்லது தனது எதிரி அப்பிரதேச
மக்களிடம் செல்வாக்கைத் தேடி விடுவார் என்ற நோக்கமா?
இப்படி நான் முந்தி நீ முந்தி என ஒலுவிலை நோக்கி ஓடி வந்து கடலிரிப்பை பார்வையிட்ட அமைச்சர்கள்
ஒலுவில் மக்களின் இந்த அவலத்தைப் போக்க அமைச்சர்களின் எதிர்கால
செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை அம்பாறை மாவட்ட மக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டேதான்
இருக்கப் போகின்றார்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.