மன்னார் பெரியமடு ஆரம்பப் பாடசாலை

கட்டிடத் தொகுதி திறப்பு விழா

அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதி

மன்னார் பெரியமடு ஆரம்பப் பாடசாலை கட்டிடத் தொகுதி திறப்பு விழா இன்று 5 ஆம் (2017.08.05) திகதி இடம்பெற்றபோது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இப்பாடசாலை கட்டிடத் தொகுதி திறப்பு விழா பாடசாலை அதிபர் இமாம் ஹன்பல் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட செயற்திட்ட அதிகாரி சலீம் கரீம்சலா, அந்நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகர், ஹமீத், மடு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலினி வெனிடன், மன்/ பெரியமடு பாடசாலை அதிபர் குலதீபன் மற்றுஅம பாடசாலை அபிவிருத்திச் சங்கம், கிராம அபிவிருத்திச்சங்கம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.












0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top