மன்னார் அல்- அஸ்ஹர் தேசியப் பாடசாலையின்
புதிய ஆசிரியர் விடுதிக்கட்டிட திறப்பு விழா
அமைச்சர் ரிஷாட் பிரதம அதிதி
மன்னார் அல் அஸ்ஹர் தேசியப் பாடசாலையின் அமைக்கப்பட்ட புதிய ஆசிரியர் விடுதிக்கட்டிட திறப்பு விழா இன்று 5 ஆம் திகதி (2017.08.05) இடம்பெற்றது.
இத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து சிறப்பித்தார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இந்த ஆசிரியர் விடுதிக்கட்டிடம் இப்பாடசாலையில் அமைக்கப்பட்டது.
இவ்விழாவில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சித்தி எய்திய மாணவர்களுக்கு பரிசில்களும், நினைவுச் சின்னங்களும் அமைச்சரினாலும் அதிதிகளாலும் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் மாஹிர் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட செயற்திட்ட அதிகாரி சலீம் கரீம்சலா, அந்நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகர், ஐ ஏ ஹமீத், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். செபஸ்டியன் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment