வித்தியா கொலை!
ஏழு பேருக்கு மரண தண்டனை
புங்குடுதீவு
மாணவி வித்தியா
படுகொலை வழக்கில்,
7 எதிரிகள் குற்றவாளிகள்
என்று சந்தேகத்துக்கு
இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது
என்றும், அவர்களுக்கு
மரணதண்டனை விதிக்கப்படுவதாகவும்
தீர்ப்பாயத்தின் மூன்று நீதிபதிகளும், தீர்ப்பளித்துள்ளனர்.
முதலில்
தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி சசிமகேந்திரன் தனது
தீர்ப்பில், 1ஆம், 7ஆம் எதிரிகள் தவிர்ந்த
ஏனைய 7 எதிரிகள்
மீதான கூட்டு
வன்புணர்வு, கொலை, கொலைச்சதி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
இதையடுத்து,
தீர்ப்பாயத்தின் மற்றொரு நீதிபதியான அன்னலிங்கம் பிரேம்சங்கரும்,
அதே தீர்ப்பையை
அளித்திருந்தார்.
மூன்றாவதாக,
நீதிபதி இளஞ்செழியன்
தனது தீர்ப்பை
வாசித்தார். அவர் தனது தீர்ப்பை நிறைவு
செய்துள்ள நிலையில்,
2ஆம், 3ஆம்,
4ஆம், 5ஆம்,
6ஆம், 8ஆம்,
9ஆம் எதிரிகளான
பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம்
சசீந்திரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன்,
ஜெயதரன் கோகிலன்,
மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் மீதான, குற்றச்சாட்டுகள்
சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக
தீர்ப்பளித்துள்ளார்.
குற்றச்சாட்டுகள்
நிரூபிக்கப்படாத முதலாவது, ஏழாவது எதிரிகளை விடுவிக்குமாறும்
அவர் தீர்ப்பளித்துள்ளார்.
இதையடுத்து,
குற்றவாளிகளாக காணப்பட்ட 7 பேரையும் நோக்கி, உங்களுக்கு
ஏன் மரணதண்டனை
விதிக்கக் கூடாது
என்று தீர்ப்பாயத்தின்
நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தனித்தனியாக அவர்களின்
விளக்கங்கள் கோரப்பட்டன.
இந்த
நிலையில் 7 பேருக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பாயம்
ஒருமித்த தீர்ப்பை
வழங்கியது.
.
இதில்,
2ஆம் எதிரியான
பூபாலசிங்கம் ஜெயக்குமார்,
3ஆம்
எதிரியான பூபாலசிங்கம்
தவக்குமார்,
4ஆம்
எதிரியான மகாலிங்கம்
சசிதரன்,
5ஆம்
எதிரியான தில்லைநாதன்
சந்திரகாசன்,
6ஆம்
எதிரியான சிவதேவன்
துஷாந்தன்,
8ஆம்
எதிரியான ஜெயதரன்
கோகிலன்,
9ஆம்
எதிரியான மகாலிங்கம்
சசிக்குமார் என்போருக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.