மனைவியை காரின் முகப்பில் கட்டிவைத்து

காரை வேகமாக ஓட்டிய கணவன் கைது!




மனைவிக்குத் தண்டனைகொடுக்கும் வகையில், அவரை முகப்பில் கட்டிவைத்து காரை ஓட்டிச் சென்ற கணவனை, பொலிஸார் கைது செய்துள்ளனர்

இந்தச் சம்பவம் ஈரானில் நிகழ்ந்துள்ளது. கணவனுக்கும் மனைவிக்குமிடையே ஏதோ வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மனைவியை மிரட்டும் வகையில், காரின் முகப்பில் அவரைக் கட்டிவைத்த கணவன் காரை மிக வேகமாக ஓட்டிச் சென்றார். இதை யாரும் தடுக்கவும் இல்லை.

காரின் முகப்பில் தொங்கியபடி, அந்தப் பெண் கத்திக் கதறியபடி இருந்தார். தரையில் விழுந்து படுகாயமடைந்தவர், தற்போது, மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பொலிஸார், அவர் கணவனைக் கைதுசெய்தனர்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவியதை அடுத்து பலரும் இச்சம்பவத்துக்குக் கண்டனம் எழுப்பியுள்ளனர். ''கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு வரலாம். அதற்காக, மனிதத் தன்மையற்ற வகையில் நடப்பது கண்டிக்கத்தக்கது. இன்னோர் உயிருடன் விளையாடும் உரிமை யாருக்கும் இல்லை. இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக் கூடாது'' என மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோஸ்டாரிகா நாட்டிலும் இதுபோன்று மனைவியை காரின் முகப்பில் கட்டிவைத்து ஓட்டிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top