அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களுடன்

ஜனாதிபதியின் செல்ஃபி!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி அங்குள்ள இலங்கையர்களை சந்தித்துள்ளார். இதன்போது அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி, அவர்களுடன் செல்ஃபி எடுத்துள்ளார்.
இது குறித்து தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சில கருத்துக்களை ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களுடனான செல்ஃபி டைம். உயர் தொழில்நுட்பம் மற்றும் புதுமையான யோசனைகளைக் கொண்ட இந்த இளம் இளைஞர்கள் இலங்கைக்கு திரும்பி வந்து சேவையை வழங்குவதற்காக நான் வாழ்த்துகின்றேன்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 17ஆம் திகதி அமெரிக்கா சென்ற ஜனாதிபதி, பல நாட்டு அரசியல் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.
இந்த நிலையில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top