முஸ்லிம் பெண் போன்று

பர்தா அணிந்து சென்ற இளைஞன்

பதுளையில் சம்பவம்


கண்கள் மட்டும் தெரியும் வகையிலான முகத்தினை மூடிய பர்தா உடையணிந்து பஸ்ஸில் ஏறிய இளைஞனொருவனை பதுளைப் பொலிசார்  இன்று முற்பகல் கைது செய்துள்ளனர்.

தெமோதரையைச் சேர்ந்த 26 வயது நிரம்பிய எஸ்.. ஜயவர்த்தன என்ற இளைஞனே பர்தா உடையணிந்திருந்த நிலையில் பதுளைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டவராவார்.

இவ் இளைஞன் முஸ்லிம் பெண்போன்று, பதுளை பஸ் நிலையத்திலிருந்து பசறை செல்லும் .போ.. பஸ்ஸில் ஏறிய போது, இவர் குறித்து சந்தேகம் கொண்ட பயணிகள் சிலர் ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவே, பொலிசார் குறித்த நபரைக் கைது செய்தனர்.

மோசடியொன்றில் ஈடுபடும் பொருட்டே, இவ் இளைஞன் பஸ்ஸில் பயணிக்க முற்பட்டிருக்கலாமென்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.


பதுளைப் பொலிசார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top