மலைப்பாம்பு வளர்த்தவர் பரிதாபமாக மரணம்
மலைப்பாம்பு தீண்டி நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம். பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
Hampshire பகுதியைச் சேர்ந்த 31 வயதான Dan Brandon என்பவரே வீட்டில் வளர்க்கப்பட்ட மலைப்பாம்பு தீண்டி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாம்பு பிரியர் என்பதால் தான் வளர்க்கும் மலைப்பாம்புகளை புகைப்படம் எடுத்து பேஸ் புக் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், தன்னுடைய வீட்டில் Dan Brandon கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுளார். அவருக்கு அருகே பாம்பு ஒன்றும் இருந்துள்ளது.
பாம்புக்கு பசி எடுத்த நிலையில் தனது உணவுக்காக Dan Brandon வை உட்கொள்ள முயற்சித்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே தெளிவான முடிவு கிடைக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.