மீண்டும் சந்தித்த மஹிந்த – ராஜித
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவைக் கடுமையாக விமர்சித்து
வரும் அமைச்சர்
ராஜித சேனாரத்ன,
மஹிந்த ராஜபக்ஸவுடன் கைகுலுக்கி சிரித்துப்
பேசிய நிகழ்வு
கடந்த செவ்வாய்க்கிழமை
இடம்பெற்றது.
சீன
மக்கள் குடியரசு
உருவாக்கப்பட்ட 68 ஆண்டு நிறைவு
நிகழ்வு சிறிமாவோ
பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மற்றும் மாநாட்டு
நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இதன்போதே,
மஹிந்த ராஜபக்ஸவும், ராஜித சேனாரத்னவும்
நீண்ட நாட்களுக்குப்
பின்னர் சந்தித்துக்
கலந்துரையாடினர்.
மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக
மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட போது,
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் இருந்து அவருடன் வெளியேறிய
முதலாவது நபராக
ராஜித சேனாரத்ன
இருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.