ரொஹிங்யா அகதிகளை வெளியேற்றக் கோரி
ஐ.நா பணியகம் முன் போராட்டம்
இலங்கையிலிருந்து ரொஹிங்யா அகதிகள்
வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரி, கொழும்பில்
உள்ள ஐ.நா பணியகம்
முன்பாக, நேற்று
போராட்டம் ஒன்று
நடத்தப்பட்டது.
சிங்கள
தேசியப் படை
என்ற பெயரிலான
அமைப்பைச் சேர்ந்த
சுமார் 50 பேர்
இந்தப் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
ரொஹிங்யா
அகதிகளால் நாட்டின்
இறைமைக்கு ஆபத்து
உள்ளது. எனவே
ரொஹிங்யா அகதிகளை
நாட்டை விட்டு
வெளியேற்றுவதற்கு ஐ.நா நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று
போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன்
ரொஹிங்யா அகதிகளை
நாட்டை விட்டு
வெளியேற்ற வேண்டும்
என்று கோரும்,
மனுவொன்றையும், சிங்கள தேசியப் படையின் பொதுச்செயலரான
அரம்பேபொல ரத்ன
தேரர் , ஐ.நா பணியகத்தில்
கையளித்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.