ரிசாட் பதியுதீன் அவர்களே!
உங்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.......!
தேர்தல்
திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன் அமைச்சர் ராஜித
சேனாரத்ன மிக
மோசமான வார்த்தைகளினால்
அமைச்சர் ரிசாட்
அவர்களை பேசிய
விடயமறிந்து நான் மிகவும் கவலையடைந்தேன். உண்மையிலேயே
ரிசாட் அவர்களை
பாராட்டுகிறேன். உங்களின் போராட்டத்துக்கு பின்தான் சட்ட
திருத்த்தில் மாற்றம் கொண்டுவர ரணில் சம்மதித்துள்ளார்
என்ற விடயமறிந்து
சந்தோசமடைகின்றோம்.
ராஜித
சேனாரத்ன மிக
மோசமான திமிருடன்
பேசிய பேச்சுக்கள்
மிகவும் பாரதூரமானது
மட்டுமல்ல முஸ்லிம்
சமூகத்தை எந்தளவுக்கு
அவர் மட்டமாக
நினைத்துள்ளார் என்ற விடயமும் தெளிவாகின்றது. இந்த
ஆட்சியை கொண்டுவருவதற்கு
முஸ்லிம்களை பகடை காயாக மாற்றி சுகம்
கண்டவரும் அவர்தான்
என்பதை கூடிய
சீக்கிரம் இறைவன்
வெளிக்கொண்டுவருவான் என்பதில் எவ்வித
சந்தேகமும் இல்லை.
இருந்தாலும்
சாதாரண பெரும்பாண்மை
மூலம் சட்டத்தை
ஆக்குவதற்கு அவர்களுக்கு முடியுமாக இருந்திருந்தால் உங்களின்
கதை அங்கே
எடுபட்டிருக்காது.
அல்லாஹ்வுடைய
நாட்டம் சட்டமா
அதிபர் 2/3 பெரும்பாண்மை மூலம்தான் இதனை நிறைவேற்ற
வேண்டும் என்று
சொன்னதற்க்கு அப்புரம்தான் உங்களின் ஆதரவு கட்டாயம்
வேண்டும் என்ற
நினைப்பில் உங்களது திருத்த கோரிக்கையை ரணில்
ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதையும் இவ்விடத்தில்
நாம் அவதானிக்கவேண்டும்.
இருந்தாலும்
ரிசாட் அவர்களே
உங்கள் போராட்டத்தை
பாராட்டுகிறேன். என்ன இழப்புக்கள் வந்தாலும் போராடுங்கள்
அல்லாஹ் உங்கள்
பக்கம் இருப்பான்.
பதவி
தறுவதும் எடுப்பதும்
அவன் செயல்
என்பதை உறுதியாக
நம்புங்கள். வெற்றி நிச்சயம்.
கல்முனை..
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.