இப்படியும் ஒரு அரசியல்வாதி
கிழக்கு மாகான சபையின் இறுதி அமர்வான இன்று சபைகூடியபோது மாகான சபையின் தேவைகளுக்காக தனக்கு வழங்கப்பட்டிருந்த பணத்தில் மீதியை மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி
பாறூக் கையளித்துள்ளார்.
அலுவலக தேவைகளுக்காக வழங்கப்பட்ட பேப்பபர் பேனை ஸ்டேப்லர் உட்பட அனைத்து மீதமுள்ள காகிதாத பொருட்களையும் ஒப்படைத்து தன்னிடம் மீதமாக இருந்த 67428 ரூபா 40 சதம் பணத்தையும் மக்களுக்கே சென்றடையும் விதமாக அவர் ஆளுநரிடம் கையளித்தார்.
இவ்வளவு காலமும் தன்னுடைய சொந்தப்பணத்திலேயே மாகான அமர்வுகளின் போதும்) உணவுத்தேவைகளையும் இதர செலவுகளையும் செலவு செய்தமைக்காக இன்றைய அமர்வின் தவிசாளர் கலபதி சந்திரதாச ஷிப்லி பாறூக் அவர்களைப் பாராட்டியுள்ளார்.
மக்கள் பணத்தை மக்களுக்கே சேர்த்து விட வேண்டும் என்ற மனப்பாங்கு பாராட்டுக்குரியது. அரசியல் பனிகளை முன்னெடுப்பவர்களுக்கு இவரின் செயல்பாடு
ஒரு முன்மாதிரி மிக்க விடயம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.