வாகன விபத்தில்
வைத்தியர் உட்பட
இருவர் வைத்தியசாலையில்
கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில்
இடம்பெற்ற வாகன
விபத்தில் சுகாதார
வைத்திய அதிகாரி
ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து பாண்டிருப்பு,
திரௌபதையம்மன் ஆலயத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்றுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த சுகாதார
வைத்திய அதிகாரி
கல்முனை வடக்கு
ஆதார வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று
வருகின்றார்.
இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் பாண்டிருப்பிலுள்ள அவரது வீட்டில் இருந்து வைத்தியசாலைக்குச் செல்வதற்காக பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய சந்தியில் பிரதான வீதியால் செல்வதற்காக வீதியோரமாக நின்றபோது கல்முனை நோக்கி மிகவும் வேகமாக வந்துகொண்டிருந்த பிக்கப் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி பல விளம்பரப் பதாதைகளில் மோதிக்கொண்டு வைத்தியரின் காரில் மோதியதுடன் வீதியால் வந்த மோட்டார் சைக்கிளிலும் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த நபரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் வைத்தியரின் கார் கடுமையான சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
பிக்கப் வாகனம் செலுத்திவந்த சாரதி கல்முனைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.