தரம் 5 புலமைப்
பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
எதிர்வரும்
5ம் திகதி வெளியிடப்படும்?
ஐந்தாம்
ஆண்டு புலமைப்பரிசில்
பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்
ஐந்தாம் திகதி
வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த
ஒகஸ்ட் மாதம்
நடைபெற்ற இந்த
ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில்
மூன்று இலட்சத்து
ஐம்பத்து ஆறாயிரம்
மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
இதன்போது
வத்தளை மற்றும்
பண்டாரவளை பிரதேசங்களில்
இருந்து விசேட
தேவையுடைய மாணவர்கள்
இரண்டு பேரும்
பரீட்சைக்குத் தோற்றியிருந்ததுடன் அவர்களின்
அசௌகரியத்தை முன்னிட்டு பரீட்சைக்கான விடைகளை குரல்
ஒலிப்பதிவின் மூலமாக வழங்கவும் சந்தர்ப்பமளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஐந்தாம்
திகதி வௌியிடப்படவுள்ளதாக
பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.