எல்லைநிர்ணயப் பணிகள் முடிந்த பின்னரே
மாகாணசபைகளுக்கு தேர்தல்
எல்லை
மீள்நிர்ணயப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னரே,
கிழக்கு, சப்ரகமுவ,
வடமத்திய மாகாணசபைகளுக்கான
தேர்தல்களை நடத்துவது என்று தேர்தல்கள்
ஆணைக்குழு முடிவு
செய்துள்ளது.
முதலில்
எல்லை மீள்நிர்ணயத்துக்கான
ஆணைக்குழு நியமிக்கப்பட்டு,
அது எல்லைகளை
வரையறுக்கும் செயற்பாடுகளை நிறைவு செய்த பின்னர்,
மூன்று மாகாணசபைகளுக்குமான
தேர்தலை நடத்த
முடிவு செய்யப்பட்டுள்ளதாக
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
“எல்லைகளை
வரையறுக்கும் செயற்பாடுகள் மூன்று மாதங்களுக்குள் நிறைவடையும்
என்று நான்
நம்புகிறேன். தேர்தலை ஜனவரியில் நடத்த முடியும்.
2018ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின்
அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும். இந்தப் பட்டியல்,
வரும் செப்ரெம்பர்
30 ஆம் திகதி வெளியிடடப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.