பாதுகாப்பு
கருதி ஷிரந்தி ராஜபக்ஸவிடம்
பிரிதொரு இடத்திற்கு
வரவழைத்து வாக்குமூலம் பெறப்பட்டது
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவின்
பாரியார் ஷிரந்தி
ராஜபக்ஸவிடம் நிதி மோசடி விசாரணை
பிரிவினர் இன்று வெளியிடமொன்றில்
வைத்து வாக்குமூலம்
பதிவுசெய்துள்ளனர்.
'ஷிரந்தி
ராஜபக்ஸ மீது நிதிக்குற்றம்
சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவரது வங்கிக் கணக்குகள்
தொடர்பில் வாக்குமூலமொன்றை
பெற்றுக்கொள்வதற்காக இன்றைய தினம்
அவரை நிதிமோசடி
தடுப்புப் பிரிவில்
ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
எனினும் சிலரது அசாதாரணமான செயற்பாடுகள் காரணமாக
பாதுகாப்புக் கருதி அவரை பிரிதொரு இடத்திற்கு
வரவழைத்து வாக்குமூலம் பெறப்பட்டதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த
வாக்குமூலமானது இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றுள்ளது. சமூக
பணிகளுக்காக வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட
பணத்தில் மோசடி
இடம்பெற்றுள்ளதாக ஷிரந்தி ராஜபக்ஸ மீது குற்றம்
சுமத்தப்பட்டுள்ளது. எனினும்
இதனை அவரது
தரப்பு முழுமையாக
மறுத்து வருகின்றது.
அத்துடன் குறித்த
நிதியானது பகிரங்கமான
முறையில் பெறப்பட்டு
சமூக பணிகளுக்காக
பயன்படுத்தப்பட்டதாக ஷிரந்தியின் ஊடக
இணைப்பாளர் அனோமா வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.