ஆளும் கட்சி எம்.பிக்கள்
அனைவரும் கட்டாயம்
23 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க வேண்டும்!
வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல வேண்டாம்
எனவும் அறிவிப்பு
நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவது தொடர்பான பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொண்டு வந்த யோசனை எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாய் கிழமை விவாதத்திற்கு எடுக்கப்படவிருப்பதால், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால், அடுத்த வாரம் வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல வேண்டாம் என பிரதமர் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.