துருக்கி தலைநகரில் இராணுவ வீரர்களை குறி வைத்து
கார் வெடிகுண்டு தாக்குதல்
28 பேர் பலி 61 பேர் காயம்
துருக்கி தலைநகர் அங்காராவில் நிகழ்த்தப்பட்ட பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். 61 பேர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது கார் வெடிகுண்டு தாக்குதல்தான் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்களால் கூறப்பட்டுள்ளது. பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததோடு, அந்த இடமே தீ பிளம்பாக காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் பிரதமர், பாதுகாப்புத் துறை மந்திரி ஆகியோரது அலுவலகங்களுக்கு அருகில் நிகழ்ந்துள்ளது.
முதற்கட்ட தகவலின் படி 5 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும், 28 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல் இராணுவ வீரர்களை ஏற்றி செல்லும் பஸ்ஸை குறி வைத்து நடைபெற்றதாக துருக்கி இராணுவ தலைமை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
துருக்கி பாராளுமன்றத்திற்கு அருகில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நேரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.