கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு நகரில் பெரும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இதனிடையே கொழும்பு வோட் பிளேஸ் பகுதியில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அருகில் நடக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பிரதேசத்தை சூழவுள்ள பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மின்சார விநியோக தடை சில பிரதேசங்களில் வழமைக்கு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லக்சபானவில் இருந்து பொல்பிட்டிய ஊடாக கொழும்புக்கு மின்சார விநியோகத்தை வழங்கும் 33 ஆயிரம் மெகாவோட் மின்சார விநியோக கட்டமைப்பின் மீது மின்னல் தாக்கியதால், மின் விநியோகம் தடைப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.