தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற
பொத்துவில் மண்ணின் தங்க மகனுக்கு
கல்முனைப் பிரதேசத்தில்
வரவேற்பு
தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலம் பதக்கங்களை பெற்று அம்பாறை மாவட்டத்திற்கும், நாட்டுக்கும், சமூகத்திற்கும் பெருமை தேடித் தந்த பொத்துவில் மண்ணின் தங்க மகன் விளையாட்டு வீரன் ஏ.எல்.எம்.அஷ்ரஃபை கல்முனை, சாய்ந்தமருது மற்றும் மருதமுனை விளையாட்டுக் கழகங்கள், வர்த்தகர்கள் வரவேற்பளித்து கெளரவித்தனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீண், சாய்ந்தமருது
பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் மரைக்காயர்களான மெளலவி
யூ.எல்.எம்.காசீம், எம்.ஐ.ஏ.மஜீத், ஐ.எல்.ஏ.றாஸீக், உஷாம் சலீம், உஷா இக்பால் என பலர்
இவரை பள்ளிவாசலில் முன்றலில் வரவேற்று கெளரவித்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.