கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ள

அரசியல்வாதிகளின் தயவை நாடும் அனுர சேனநாயக்க?

சிங்கள இணையத்தளம் தெரிவிப்பு


முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் அரசியல்வாதிகளின் தயவைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார் என. சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதவான் நிசாந்த பீரிஸ் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இக்கொலையை மறைத்து அதனை விபத்து மரணமாக சித்தரிப்பதில் பெரும் பங்காற்றிய முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவும் இதன் மூலம் கைது செய்யப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது..
இதனையடுத்து அவர் தான் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் அரசியல்வாதிகளின் தயவைப் பெற்றுக் கொள்ளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அந்த  சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளையும் சந்தித்து தன் மீது கருணைப் பார்வையை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் மன்றாடிவருவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top