எம்பிலிப்பிட்டிய இளைஞரின் மரணத்துக்குக் காரணமானவர்களை

கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு


எம்பிலிப்பிட்டிய இளைஞரின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்குக் காரணமானவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது
கடந்த ஜனவரி 04ம் திகதி எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற விருந்து வைபவமொன்றில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான மோதலில் சுமித் பிரசன்ன ஜயவர்த்தன எனும் இளைஞர் உயிரிழந்திருந்தார்.
பொலிசார் அவரை மூன்றாம் மாடியில் இருந்து தள்ளிவிட்டதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக சுமித்தின் மனைவி பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சமர்ப்பிக்கப்பட்டிருந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் பிரகாரம், உள்காயங்கள் மற்றும் ரத்தநாளங்களில் ஏற்படம் சேதம் காரணமாக சுமித் பிரசன்னவின் மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மரணத்திற்குக் காரணமானவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்யுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்கத்தின் அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top