தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான

பாகிஸ்தான் பல்கலைக்கழகம். மீண்டும் திறப்பு

பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான பச்சா கான் பல்கலைக்கழகம், பலத்த பாதுகாப்புக்கிடையே மீண்டும் நேற்று திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஃபாஸல் ரஹீம் மார்வத் மாணவர்களை வரவேற்றுப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: பல்கலைக்கழகத்தில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் நிகழா வண்ணம் அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் எங்களுக்கு திருப்தியளித்ததையடுத்தே பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படுகிறது.
பயங்கரவாதத் தாக்குதலால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியிலிருந்து அவர்களை விடுவிக்க சிறப்பு ஆலோசனை வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக, பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பச்சா கான் பல்கலைக்கழகம் கடந்த மாதம் 25-ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் மூடப்பட்டது.

கைபர்-பக்துன்கவா மாகாணம், சார்சத்தா நகரிலுள்ள பச்சா கான் பல்கலைக்கழகத்தில் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 20-ஆம் திகதி நிகழ்த்திய தாக்குதலில் மாணவர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 21 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top