"நீ மீண்டும் வெளிநாடு சென்றால் இவ்வாறே தூக்கில் தொங்குவேன்"
குடிபோதையில்
நடித்துக் காட்டியவருக்கு நேர்ந்த பரிதாபம்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவைச் சேர்ந்த நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
காரைதீவு - 12 பிறப்பிடமாகக் கொண்ட, இரண்டு
பிள்ளைகளின் தந்தையான தம்பிப்பிள்ளை பிறைசூடி (40 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:
மரமேறும் கலையைப் பிரதான தொழிலாகக் கொண்டுள்ள குறித்த நபர் நேற்று இரவு 8.00 மணியளவில் தனது வீட்டு முற்றத்தில் உள்ள கிட்டத்தட்ட 60 அடி நீளமுள்ள இலவம்பஞ்சு மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளார்.
இதற்கிடையில் தனது மனைவி ஏற்கனவே வெளிநாடு சென்று திரும்பியிருந்த நிலையில் அவர் மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று கணவனிடம் கூறியதாகவும், அதற்கு அவர் "நீ மீண்டும் வெளிநாடு சென்றால் இவ்வாறே தூக்கில் தொங்குவேன்" என விளையாட்டிற்காக நடித்துக்காட்டிய வேளையில் அவரின் உயிர் பிரிந்து சென்றதாகவும், உயிரிழக்கும் போது குறித்த நபர் குடிபோதையில் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.