கலகொட அத்தே ஞானசார தேரரின்
விளக்கமறியல்
நீடிப்பு
பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார
தேரருக்கு எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம
நீதிமன்றம் உத்ரவை வழங்கியுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா
எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கே இவ்வாறு விளக்க
மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஹோமாக நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றச்சாட்டு தொடர்பான
வழக்கில் அண்மையில் ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆறு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 11 பேருக்கு விளக்க
மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் கலகத்தில் ஈடுபட்டதாக இவர்கள்
மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி வரையில் குறித்த நபர்களை
விளக்க மறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.