தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை
உயர் அதிகாரிகளே! இது உங்களின் கவனத்திற்கு!!


தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையியினால் சாய்ந்தமருது பிரதேசத்தில் வழங்கப்படும் குடி நீர் அசுத்தமானதாக இருப்பதாக அப்பிரதேச மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இப்பிரதேசத்தில் வழங்கப்படும் குடி நீர் கறுப்பு நிறமாகவும் அழுக்குகள் உள்ளதாகவும் மனிதர்கள் குடிப்பதற்கு முடியாத நிலையில் இருப்பதாகவும்  மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளரின் 077 2442047  தொலைபேசி இலக்கத்துடன் இன்று 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு தொடர்பு கொண்டபோது பிழையான இலக்கம் என தொலைபேசியை எடுத்தவரால் தமிழில் பதிலளிக்கப்பட்டதாகவும் இரண்டாவது தடவையாகவும் இந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டபோது துண்டித்துவிட்டதாகவும் முறைப்பட்டாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.
இது சம்மந்தமாக 1939 இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கதைத்தபோது 284360 முறைப்பாட்டு இலக்கம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை  உயர்அதிகாரிகளே!   

                                    இது உங்களின்  கவனத்திற்கு!!





0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top