நாளை 12 ஆம் திகதி தேசிய துக்கதினம்
தேசியக் கொடியை
அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு கோரிக்கை
சங்கைக்குரிய
மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் 12 ஆம் திகதியான நாளைய
தினம் தேசிய
துக்க தினமாக
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் சினிமா திரையரங்குகள்,
இறைச்சிக்கடைகள் மற்றும் மதுபானசாலைகள் மூடப்படுமென உள்நாட்டலுவல்கள்
அமைச்சர் வஜித
அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அரச அலுவலகங்களில் நாளைய தினம்
தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு சகல திணைக்களத் தலைவர்களுக்கும் சுற்றுநிருபம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை,
அன்றைய தினம்
இடம்பெறவிருந்த தேசிய நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகள்
உட்பட அரச
மற்றும் அரசசார்பற்ற
அனைத்து பொது
நிகழ்வுகளும் பிற்போடப்பட்டுள்ளன.
இறுதிக்கிரியைகள்
நாளை நாடாளுமன்ற
மைதானத்தில் நடைபெறுவதுடன் உள்நாட்டலுவல்கள்
அமைச்சின் பொறுப்பில்
அமைச்சர் வஜித
அபேவர்தன தலைமையிலான
குழு இதற்கான
சகல ஏற்பாடுகளையும்
மேற்கொண்டுள்ளது.
மாதுலுவாவே
சோபித தேரரின்
இறுதிச்சடங்கு பூரண அரச அனுசரணையுடன் இடம்பெறுகின்றமை
குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.