முன்னாள் அமைச்சர்  ஏ.ஆர் மன்சூரை

குவைத் நாட்டின் தூதுவர் வீட்டிற்கு சென்று சந்திப்பு

இலங்கைக்கான குவைத் நாட்டின் தூதுவர் கலாப் பு தாயிர் (EMBASSY OF THE STATE OF KUWAIT  KHALAF  BU DHHAIR Ambassador) இன்று 12 ஆம் திகதி வியாழக்கிழமை முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சரும் குவைத் நாட்டில் இலங்கையின் தூதுவராக சிறப்பாக சேவையாற்றியவரும் முஸ்லிம்களின் மூத்த அரசியல்வாதியுமான ஏ.ஆர்.மன்சூர் அவர்களை அவரின்  கொழும்பு வீட்டிற்குச் சென்று சந்தித்துப் பேசினார்.
நண்பர்களான குவைத் நாட்டின் தூதுவரும் முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்களும் இந்நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களின் முன்னேற்றம் குறித்தும் வறிய மக்கள் வாழும் முன்னேற்றம் கண்டிராத பிரதேசங்களின் அபிவிருத்தி பற்றியும் கலந்துரையாடியதுடன் தமது இருவரின் பழைய நினைவுகளையும் மீட்டுப்பார்த்துக்கொண்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இறுதியில் குவைத் நாட்டின் தூதுவர் KHALAF  BU DHHAIR அவர்கள் மன்சூர் அவர்களின் வீட்டிற்குச் சென்றதன் நினைவாக முன்னாள் அமைச்சர் மன்சூர், ஜனாபா ஸொஹறா மன்சூர் ஆகியோருடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.







0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top