இந்தியா - பாகிஸ்தான் தொடரை இலங்கையில் நடத்த

பாகிஸ்தான் அரசு அனுமதி!



இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் நடத்துவதற்கு ஏற்ற சூழல் இல்லாததால் ஐக்கிய அரபு அமீரகம் அல்லது வேறு ஏதாவது பொதுவான இடத்தில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை நடத்துவது என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இப்போது இரு நாடுகளும் கலந்தோலோசித்து இந்தத் தொடரை இலங்கையில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இரு நாட்டு அரசுகளின் அனுமதி தேவைப்படுகிறது.
இலங்கையில் நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு வெளியுறவு அமைச்சகத்துக்கு செவ்வாய்க்கிழமை பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் தங்கள் நாட்டு அரசிடம் அனுமதி கோரிய  நிலையில், இலங்கையில் தொடரை நடத்த பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இன்று அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து இந்திய அரசும் அனுமதி வழங்கிவிட்டால் இலங்கையில் அடுத்த மாதம் இரு நாடுகளுக்கிடையே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறும்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top