பாரிஸில் துப்பாக்கிச் சூடு
மூன்று பேர் பலி
பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட போது துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் மூவர் பலியானதாகவும், பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு .எஸ் அமைப்பினர் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் 129 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலை அடுத்து, தீவிரவாதிகள் யாரேனும் பதுங்கியுள்ளனரா என்று ராணுவம் மற்றும் பொலிஸார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பாரிஸின் வடக்கு பகுதியில் உள்ள செயின்ட் டெனிஸ் பகுதியில் ராணுவத்தினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இரு தரப்பினருக்கும் கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வரும் நிலையில், மூவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அப்பகுதி மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top