பாகிஸ்தானின் முதல் பெண் போர் விமானி
மரியம் முக்தியார் விமான விபத்தில் மரணம்
பாகிஸ்தானின், முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார், பயிற்சியின் போது, விமான விபத்தில் உயிரிழந்தார்.
பாகிஸ்தான் இராணுவத்தில், பெண்களின் பங்கு மிகவும் குறைவு. விமான படையில், சில பெண்களே உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் விமான படையில், முதல் பெண் போர் விமானியாக தகுதி பெற்றவர், மரியம் முக்தியார்.
தற்போது, அதிகாரி அந்தஸ்தில் பணியாற்றி வந்த மரியம் மற்றும் சக வீரருடன், நேற்று முன்தினம் போர் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, இஸ்லாமாபாத்தில் உள்ள மியான்வாலி மாவட்டத்தில் 175 கி.மீ உயரத்தில் FT-7PG என்ற விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டார். விமானம் தரையிரங்கும் போது, ஏற்பட்ட திடீர் கோளாறால், விமானம் விழுந்து நொறுங்கியது. இதில், மரியம் முக்தியார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவருடன் சென்ற வீரர், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.