அமைச்சர் திலக் மாரப்பன இராஜினாமா
உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன இராஜினாமா செய்துகொண்டுள்ளார்.
நுகேகொடையிலுள்ள தனது வீட்டில் வைத்து இன்று 10.30க்கு காலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தனது இராஜினாமா தொடர்பில்
அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதேவேளை, தனது இராஜினாமா கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும்
அவர், இந்த ஊடகவியராளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். தான். அமைச்சராக பதவிவகித்தால்,
அவன்ட் காட் மீதான விசாரணைகள் பொலிஸாரால் ஒழுங்காக மேற்கொள்ளப்படாது என்ற எண்ணம் நாடாளுமன்ற
உறுப்பினர்களிடமும் பொது மக்களிடமும் காணப்படுவதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இராஜினாமா கடிதம் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி தற்பொழுது நடைபெற்றுவரும் விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.