பிரதி அமைச்சர் ஹரீஸுக்கு
பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரால் வரவேற்பு
விருந்துபசாரமும் அளித்து கௌரவிப்பு
பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸுக்கு சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர்
சபையினரும், மரைக்காயர் சபையினரும் இணைந்து வரவேற்பளித்ததுடன் விருந்துபசாரமும் அளித்து கௌரவித்துள்ளனர்.
இந்நிகழ்வு
நேற்று
முந்தினம் 14 ஆம் திகதி சனிக்கிழமை
இரவு இஷா
தொழுகையை தொடர்ந்து
மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ஹோட்டலில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது,
மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்
நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ்
வை.எம்.ஹனீபா தலைமையில் இவ்வரவேற்பு வைபவம் இடம்பெற்றது.
சாய்ந்தமருதில்
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள்
அடங்கிய மகஜர்
ஒன்றினை பிரதி
அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் பள்ளிவாசல்
நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனீபா கையளித்தார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத்,
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பிரதித் தலைவர் மௌலவி யூ.எல்.எம்.காசீம், செயலாளர் ஏ.மஜீத்
(ரோஷன்) அல்ஹாஜ் ஏ.ஏ.சலீம், ஐ.எல்.ஏ றாஸீக், ஏ.எம்.அபூபக்கர் உள்ளிட்ட நம்பிக்கையளர் சபை உறுப்பினர்கள், மரைக்காயர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.