ஜூலை 1 வரை நாடாளுமன்ற உறுப்பினர்
உதய கம்மன்பில விளக்கமறியலில்!



பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் இன்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை, ஜூலை 1ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு, கோட்டை நீதவான் முன்னிலையில், ஆஜர்படுத்தியபோதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்
நுகேகொட பாகொட வீதியில் உள்ள அலுவலகத்தில் வைத்து இன்று காலை கம்மன்பில கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான்இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

போலி ஆவணங்களின் ஊடாக அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றின் பங்குகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே கம்மன்பில விசேட விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top